ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏல அழைப்பு எப்போது ?

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் முதற்கட்ட ஏலத்துக்கான அழைப்பு அடுத்த இரு வாரங்களில்  விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வருவதை அடுத்து அதைச் சரிக்கட்ட மத்திய அரசு மேற்கொண்ட பல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ஐதராபாத்தில் ஏர்ஷோ (Airshow) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை செயலாளர் ராஜீவ் சவ்பே, (Rajiv Choubey) அடுத்த இருவாரங்களில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் முதற்கட்ட ஏலத்துக்கான அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment