விரைவில் ஏர் இந்தியா விற்பனை நடவடிக்கைகள் தொடங்க வாய்ப்பு!

விரைவில்  ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

நஷ்டத்திலும், கடனிலும் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை 4 பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா சாட்ஸ் ஆகியவை ஒரு பிரிவாகவும் தரைக்கட்டுப்பாட்டு மையம், பொறியியல் பிரிவுகள், அலையன்ஸ் ஏர் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்தும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் இரு  வாரங்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இண்டிகோ நிறுவனம் ஏர் இந்தியா பங்குகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாத இறுதிக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கப்போவது யார் எனத் தெரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment