கொரோனா வைரஸை கொல்லக்கூடிய காற்று வடிகட்டி! விஞ்ஞானிகள் அசத்தல்!

கொரோனா வைரஸை கொல்லக்கூடிய காற்று வடிகட்டி.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 12,625,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 562,820 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரையில், இந்த வைரஸ் பாதிப்பால், 822,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22,144 பேர் உயிரிழந்துள்ளனர். ஈலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள்  கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதனையடுத்து,  கொரோனா வைரஸைப்  “பிடிக்கவும் கொல்லவும் கூடிய ” காற்று வடிகட்டியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு இணை ஆசிரியர் ஜிஃபெங் ரென் அவர்கள் கூறுகையில், இந்த வடிகட்டி விமான நிலையங்களிலும், விமானங்களிலும், அலுவலக கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் பயணக் கப்பல்களில் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.

இந்த வைரசால் 70 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலையைத் தக்கவைக்க முடியாது என்று ஆராய்ச்சி குழுவுக்குத் தெரியும், எனவே ஆராய்ச்சியாளர்கள் சூடான வடிகட்டியைப் பயன்படுத்த முடிவு செய்தனர். வடிகட்டி வெப்பநிலையை மிகவும் வெப்பமாக்குவதன் மூலம் – சுமார் 200 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில், அவர்களால் வைரஸை கிட்டத்தட்ட உடனடியாக கொல்ல முடிந்தது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.