அதிமுகவில் திடீர் மாற்றம்! பெரியகுளம் வேட்பாளர் மாற்றம்

அதிமுகவில் திடீர் மாற்றம்! பெரியகுளம் வேட்பாளர் மாற்றம்

  • தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்  நடைபெற உள்ளது.
  • கட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பெரியகுளம் தனி தொகுதி அ.தி.மு.க வேட்பாளரை மாற்றியுள்ளது அதிமுக .

பெரியகுளம் இடைதேர்தலில் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகம் இல்லாத, கட்சி பொறுப்பிலும் இல்லாத சாதாரண உறுப்பினராக அரசு பணியில் இருக்கும் முருகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பெரியகுளம் (தனி) அ.தி.மு.க வேட்பாளர் முருகனை மாற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. காரணம் என்னவென்றால் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் முருகன் கலந்து கொள்ளவில்லை.

Image result for பெரியகுளம் அதிமுக வேட்பாளர்

அதேபோல், சென்னையிலிருந்து தேனி வந்த ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத்குமார், பட்டாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராஜன் வந்திருந்தார். ஆனால், பெரியகுளம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் வரவில்லை.

இந்நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பேட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளராக மயில்வேல் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *