பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது-முதலமைச்சர் பழனிச்சாமி

  • அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
  • பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,  பிரம்மாண்ட கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது.தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டுவர அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்துள்ளோம்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள்? என்றும்  மக்களை பற்றி கவலைப்படாமல் குடும்பத்தினர் அதிகாரத்தில் வர முயற்சி செய்தவர் கருணாநிதி.

திமுகவில் குழப்பமான சூழல் நிலவுகிறது. குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே கட்சிப்பதவிக்கு வர முடியும். இங்கு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு கொல்கத்தாவில் மாற்றி பேசினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment