அதிமுக அரசு பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது-முதல்வர்.!

அதிமுக அரசு பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது-முதல்வர்.!

சென்னை வடபழனியில் கட்டப்பட்டுள்ள 9 தளங்களுடன் 1 லட்சத்து 50 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அதிநவீன வசதிகள் மற்றும் 250 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

பின்னர், பேசிய முதல்வர், இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது, அதிமுக அரசு பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது  என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், மருத்துவம் ஒரு கலை, வணிகம் அல்ல. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அன்புடம் கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும். மேலை நாடுகளை விட குறுகிய காலத்தில் கொரோனாவில் இருந்து மக்களை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

மிகச்சிறந்த மனிதர் கட்டமைப்பை ஏற்படுத்திமனிதவள கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளதால் நாட்டின் மருத்துவத் தலைநகராக தமிழகம் உள்ளது. பிரசவத்தின்போது குழந்தை இறப்பு சதவிகிதம் குறைந்துள்ளது, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளைப் போல தனியார் மருத்துவமனைகளும் தரமான மருத்துவ சேவைகள் வழங்கி வருகின்றன என கூறினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube