அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு ! தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்  வருகின்ற 24 -ஆம் தேதி  நடைபெரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.இந்த க்கூட்டம்  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்றும்  அறிவிக்கப்பட்டது.
இந்த நிழலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சுந்தரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இன்று இந்த வழக்கிகு தொடர்பான விசாரணை நடைபெற்றது.அப்பொழுது வழக்கினை வாபஸ் பெறுவதாக சுந்தரம் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து  சுந்தரம் மனுவை வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.