அதிமுக கூட்டணி ..!தலைமை மட்டுமே முடிவெடுக்கும்

  • அதிமுக கூட்டணி வியூகங்கள் குறித்து கட்சித் தலைமை மட்டுமே முடிவெடுக்கும் என்று  அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
  • உடன்பிறப்புகள் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புக்கள் சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம்.

மிகுந்த கட்டுப்பாடு,ஒழுங்கும்,ஜனநாயகப் பண்பும் நிறைந்த ,அதிமுகவின் தற்போதைய கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தீர ஆராய்ந்து, கழக கொள்கை கோட்பாடுகளின்படி முடிவெடுப்பார்கள்.அதிமுகவின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.