விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்…

நெற்பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வயல் வரப்புகளில் சூரியகாந்தி, எள் போன்றவற்றை பயிரிட விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் வலியுறத்தி உள்ளனர்.நெற் பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சி மாவட்டம், த. நடராஜபுரம் கிராமத்தில் வேளாண்துறை அதிகாரிகள் நடத்தினர். சூரியகாந்தி, எள் மற்றும் பயறு வகைகளை வரப்புகளில் பயிரிடுவதன் மூலம் நெற்பயிரினை தாக்கும் பூச்சி நோய் தாக்குதல் குறையும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு பெருமளவில் குறையும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment