மீண்டும் வாக்குச்சீட்டா?! அதற்க்கு வாய்ப்பே இல்லை – தலைமை தேர்தல் ஆணையம்!

விரைவில் மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதலில் மஹாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் என முக்கிய அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரி பேசுகையில், ‘ மீண்டும் வாக்குசீட்டு முறை கொண்டுவருதல் சாத்தியமில்லாத ஒன்று, அது பழங்கால கண்காட்சி பொருள் போல இருக்கிறது. கார், மோட்டார் சைக்கிள் போல அதிலும் பழுதுகள் ஏற்படும். ஆனால் அதனை யாரும் ஹேக் செய்துவிட முடியாது’  என திட்டவட்டமாக தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.