ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடிகளின்..!! மேல் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்..!!!

ஆப்கானிஸ்தானில் காபூல் உள்ள சோதனை சாவடியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த வியாழக்கிழமை கசினி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கிழக்கு கசினி மாகாணத்தில் உள்ள சோதனை சாவடி மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த போலீசார் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.  மேலும், குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 4 போலீசார் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment