அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 104 பேர் பங்கேற்பு!

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் 104 பேர் பங்கேற்றனர். பல்வேறு காரணங்களை கூறி ஏழு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டப்பேரவையில் தினகரன் பேசும் போது, அமைதி காக்க வேண்டும் என எம்.எல்.ஏக்களை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாய்ப்புள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அ.தி.மு.கவிற்கு புதிதாக தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கூறியதாகவும் தகவல் தெரிவிக்கபடுகின்றன …
source: dinasuvadu.com

Leave a Comment