வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிட புதிய நீதி கட்சி தலைவர் வேட்புமனு தாக்கல்!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டில் வேலூர் மக்களவையில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைககளை மீறியதாக கூறி வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5இல் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அதிமுக சார்பில் கூட்ட்டணி கட்சியான புதிய நீதி கட்சி தலைவரான ஏ.சி.சண்முகம் தான் போட்டிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது,. தற்போது அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.