அத்திவரதர் வைபவம் – சிறப்பு எஸ்.ஐ உயிரிழப்பு!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த மாதம்  1-தேதி முதல் 31 நாள்கள் சயன  கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். பின்னர் அத்திவரதர் கடந்த  1-தேதி முதல்  நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

மேலும் அத்திவரதர் வருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.  பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை சிறப்பு எஸ்.ஐ  வெள்ளையன் கிரி பாதுகாப்பு ஈடுபட்டு வந்து உள்ளார். இவர் அங்கு உள்ள தனியார் கல்லூரியில் தங்கி இருந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் எஸ்.ஐ  வெள்ளையன் கிரி உயிர் இழந்தார்.

author avatar
murugan