அரசியலமைப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறியுள்ளார்-காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவை  இன்று மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை  அமைச்சர் அமித் ஷா.தாக்கல் செய்த பின்னர் மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அனைத்து விதிகளையும் மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை .அரசியலமைப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறியுள்ளார்.திறந்தவெளி சிறைச்சாலையாக காஷ்மீர் மாற்றப்பட்டுவிட்டது.

ஐ.நா. கண்காணித்து வரும் போது உள்நாட்டு விவகாரம் என எப்படி கூறலாம்? என்றும் காஷ்மீர் உள்நாட்டு விவகாரமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பேசினார்.