பல விருதுகளை வென்ற நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் !

தமிழ் நடிகை சுகன்யா  ஒரு நேரத்தில் இவருக்கு அப்படி ஒரு பெயர், புகழ். புது நெல்லு புது நாத்து படம் அவர் மூலம் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பல விருதுகளை கொடுத்தது.

தேடி வந்த படங்களுக்கு தேதி கொடுக்க முடியாதளவுக்கு அவர் மிகவும் பிசியாக இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு படவாய்ப்புகள் பெரிதளவில் இல்லை. சில டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே அவரை காணமுடிகிறது.

இந்நிலையில் சுகன்யாவை விரைவில் சினிமாவில் பார்க்கலாம். சேரன் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம். பல படங்களில் நடிப்பதை விட அழுத்தமான கேரக்டர்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறாராம்.

அதனால் தான் சினிமாவிற்கு நீண்ட இடைவெளி விட்டுவிட்டாராம்ஆனாலும் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவரை மறக்க மாட்டார்கள் என்பது அவரது நம்பிக்கை.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment