இயக்குனராக புதிய அவதாரம் எடுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார்.!

இயக்குனராக புதிய அவதாரம் எடுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார்.!

‘கண்ணாமூச்சி’ திரைப்படம் மூலம் இயக்குனராக புதிய அவதாரத்தில் காலடி எடுத்து வைக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

தமிழ் சினிமாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார் விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , சர்க்கார், மாரி 2 போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

தற்போது, ஒரு திரைப்படத்தை அவரே இயக்கி வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘கண்ணாமூச்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அந்த வகையில், இந்த திரைப்படத்தில் சம்.சி. எஸ் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இறுதியாக ஒரு இயக்குனராக இந்த புதிய அவதாரத்தில் காலடி எடுத்து வைக்கிறேன். உங்களுது வாழ்த்துக்கள் மற்றும் பதிலுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube