டிக்டாக்கில் களமிறங்கிய நடிகை த்ரிஷா!

ரசிகர்களை உற்சாகப்படுத்த டிக் டாக்கில் களமிறங்கிய நடிகை த்ரிஷா.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை திரிஷா டிக் டாக் பக்கம் களமிறங்கி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசியாக வலம் வந்த நடிகை திரிஷா, கேமரா முன் நிற்க முடியாமல் இருக்கும் தருணத்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.