கை, கால்களில் இரத்த காயங்களுடன் நடிகை சிம்ரன்! பதறி போன ரசிகர்கள்!

கை, கால்களில் இரத்த காயங்களுடன் நடிகை சிம்ரன்.

நடிகை சிம்ரன் நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டத்தில், 2003-ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகி இருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பின், சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்திலும், ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட, நெத்தி, கை கால்களில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், சிம்ரனுக்கு அடிபட்டுவிட்டதோ என திகைத்திருந்த வெளியில், அது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிந்தவுடன், ரசிகர்கள் மனநிம்மதி அடைந்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.