நந்தினிக்காக குரல் கொடுக்கும் நடிகர் விவேக்!

டாஸ்மார்க் மதுபானங்களுக்கு எதிராக குரலெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர் நந்தினி. இவருக்கு துணையாக இவரது தந்தை ஆனந்தும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 2014- இவர் மீது தொடரப்பட்ட  விசாரணைக்காக நந்தினியும் அவரது தந்தையும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்நிலையில், நந்தினி நீதிபதியிடம் டாஸ்மாக் மூலமாக போதைப்பொருள் விற்பது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து இது போன்ற கேள்விகளை இனி எழுப்ப மாட்டோம் என்று கையெழுத்திடுமாறு நீதிபதி கூறியுள்ளார். அதற்க்கு நந்தினி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இவர்கள் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி, இருவரையும் ஜூன்-9ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. இந்நிலையில், இவருக்கு ஜூலை 5-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், “அன்பு சகோதரி, உங்கள் நல் நோக்கம் நிறைவேறட்டும். உங்கள் வாழ்வில் அமைதி பூக்கட்டும்.” என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.