தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த எஸ்.வி.சேகர்.
நடிகர் எஸ்.வி.சேகர் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நடிகராவார். இவர் பல திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் தான் வாங்கிய பால் பாக்கெட்டுகள் காய்ச்சும் போது திரிந்து விட்டதால், நான் என்ன செய்வது என முதலமைச்சரை ட்வீட்டரில் டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக, புதிய 9 பால் பாக்கெட்டுகளை ஆவின் அதிகாரி ஒருவர், வீட்டிற்கே வந்து மாற்றி கொடுத்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.