நடிகர் சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் – அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டம்!

புதிய கல்விக்கொள்கை பற்றி நடிகர் சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசியிருக்கிறார் என்று  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு  தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை பற்றி சூர்யாக்கு என்ன தெரியும் என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு, நடிகர் சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் மூன்று வயதிலே மூன்று மொழி திணிக்கப்படுகிறது என்றும் மூன்று வயது குழந்தைகள் இதனை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றும் வினவி இருந்தார். எல்லோரும் அமைதியாய் இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும் அனைவரும் அது குறித்து தங்கள் கருத்தினை உரக்கச்சொல்ல வேண்டும் என்று கூறி இருந்தார்.

நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு  பாஜக மணிலா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் , பாஜக தலைவர்  செயலாளர் ஹச்.ராஜா உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்நிலையில், இன்று தமிழக செய்தித்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு கூறுகையில், சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதாகவும் எதையும் நன்கு தெரிந்து பேச வேண்டும். மேலும், சூர்யாக்கு புதிய கல்விக்கொள்கை பற்றி என்ன தெரியும் என்றும் கட்டமாக கூறியிருக்கிறார்.