நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா அரசியல் செய்ய வேண்டாம் – எல்.முருகன்.

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா உட்பட யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர்  எல்.முருகன் கூறுகையில்,நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா உட்பட யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.