இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபர் இவரா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபர் இவரா

பிக்பாஸ் 3 தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருகிறார் .இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சற்று பரபரப்பாக சென்று கொண்டு தான் இருக்கிறது .இதற்க்கு காரணம் வனிதா மீது அவர் இரண்டாவது  கணவர் தனது குழந்தையை வனிதா  கடத்தி வந்தாக கூறி புகார் அளிக்க அது குறித்து காவல்த்துறை விசாரணை நடத்தியது .மீரா மிதுன் மீது பண மோசடி குறித்து காவல்த்துறை பிக்பாஸ் வீட்டிற்கே  சென்று விசாரணை நடத்தியது.

கடந்த இரு நாட்களாக இயக்குனர் சேரனுக்கும் நடிகர் சரவணனுக்கு இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் சரவணன் சேரனை இயக்குனர் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசி வருகிறார் .நேற்று கூட வாடா போடா ,லூசு மாதிரி பேசுற என மிகவும் கேவலமாக பேசினார் சரவணன். ஆனால் சேரனோ சற்றும் கோவப்படாமால் அப்படி பேசாதிங்க அண்ணா  என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார் .

இதற்க்கு முன் சேரனை மீரா மிதுன் தன்னை சேரன்  டாஸ்க்கின் போது தவறாக தொட்டதாக கூற கமல் அதற்கு குறும்படம் வெளியிட மக்களால் வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.இதனிடையில் சரவணனும் தான் பேருந்தில்  பெண்களை  உரசுவதற்க்காக கல்லூரி காலங்களில் செல்வதுண்டு என்று கூற கடும் எதிரிப்பு கிளம்பியது .

ஆக மீராவை வெளியேற்றியது போல் சரவணன் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் இந்த வாரம் அவர் வெளியேற்றப்படுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம் .உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்க வாசகர்களே !

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube