வைரலாகும் நடிகர் கதிரின் லேட்டஸ்ட் புகைப்படம் !!!!

  • சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி நடிகர் கதிர்.
  • நிகழ்ச்சி முடிந்த பின் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆவார்.இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய “மதயானை கூட்டம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன் பின் 2015 -ம்  ஆண்டு வெளியான “கிருமி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதன்  பிறகு நடிகர் கதிர் சமீபத்தில் வெளி வந்த “பரியேறும் பெருமாள்” படத்தில்  நடித்து உள்ளார். இந்த படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.இப்படம் பல விருதுகளை குவித்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் கதிர்  நடித்து வரும் “சத்ரு” இப்படத்தை இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் இயக்குகிறார். மேலும் ஸ்ருஷ்டி டாங்கே , சுஜா வருநீ , நீலிமா ராணி , பொன்வண்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி நடிகர்  கதிர் “தளபதி  63” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், மேலும் “தளபதி 63” படம் வருகின்ற தீபாவளி-க்கு ரிலீஸ் என கூறினார்.மேலும் நிகழ்ச்சி முடிந்த பின் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

author avatar
murugan

Leave a Comment