பாலாற்றில் அனுமதி இன்றி மணல் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் சி.வி.சண்முகம்

பேரவையில் சட்டத்துறை  அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 1099 கிரானைட் குவாரிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும்  பாலாற்றில் அனுமதி இன்றி மணல் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் .சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மணல் எடுத்தாலும், பொதுமக்கள் எதிர்ப்பு இருந்தால் அதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் சட்டத்துறை  அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.