ஆஸ்திரேலியா மக்கள் எடுத்த அதிரடி முடிவு!

  • ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டு தீயின் காரணமாக கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியுள்ளது.இதனால் ஒட்டகங்கள் தண்ணீர் தேடி வருகின்றன.
  • வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சேதப்படுத்துவதன் காரணமாக ஒட்டகங்களை கொல்ல அப்பகுதி மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஏராளமான ஒட்டகங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தண்ணீரை குடித்து செல்வதாக கூறப்படுகிறது.

மேலும் வீட்டின் வேலியை உடைப்பது மட்டுமில்லாமல் ஏ.சியில் வழியும் நீரை குடிப்பதற்காக வீடுகளை சுற்றிச் சுற்றிவந்து இடையூறு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.இதன் காரணமாக ஒட்டகங்களை சுட்டு கொல்ல அந்நாட்டினர் முடிவெடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 10 லட்சம் ஒட்டகங்கள் இருப்பதாக தெரிகிறது.அதில் சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை பிடித்து ஹெலிகாப்டரிலிருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முடிவெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.