ட்வீட்டரில் அபிராமி பதிவிட்ட அதிரடியான பதிவு! பலரின் கேலி கிடலுக்கு ஆளான அபிராமி!

ட்வீட்டரில் அபிராமி பதிவிட்ட அதிரடியான பதிவு! பலரின் கேலி கிடலுக்கு ஆளான அபிராமி!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமிக்கு முகன் மீது ஏற்பட்ட காதலால் சில கலவரங்களும், மோதல்களும் ஏற்பட்டது. இதன் மத்தியில் அபிராமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து அபிராமி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பாதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘என்னை ஏளனமாக பேசினாலும்..!! என் அன்பைமட்டும் தரவிரும்பும் என் மனம் ஒருபோதும் உங்களை வெறுக்காது அன்பே சிவம்’. என பதிவிட்டுள்ளார். இதில் ஏளனம் என்பதற்கு பதிலாக, ஏலனம் என்று தவறாக பதிவிட்டுள்ளார். இதனால் இவரை மதுமிதான ஆர்மி மற்றும் பலரும் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube