அர்விந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு ?குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்கு மன்னிப்பு….

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் தேர்தலின்போது குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்கு சிரோமணி அகாலி தள் கட்சியின் பிக்ராம் சிங் மஜிதியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்களின்போது, பா.ஜ.க. – சிரோமணி அகாலி தள் அரசை அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக வருவாய் துறை அமைச்சராக பிக்ரம் சிங் மஜிதியா மீது நேரடியாக போதை மருந்து குற்றம்சாட்டினார்.

இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என கூறி, மஜிதியா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தனது புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்றும், தாம் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தாம் கூறிய குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment