ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை மேலும் நீட்டித்தது உச்சநீதிமன்றம் 

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சமூக நலத்திட்டங்களுக்கும்,அதுபோல வங்கி மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே வருகிற மார்ச் 31-ந் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஆதார் வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment