ஆதார் எண்கள் 16.65கோடி பான் எண்களுடன் இணைப்பு!

மத்திய அரசு, ஆதார் எண்ணுடன் 16 கோடியே 65லட்சம் பான் எண்களும், 87கோடியே 79லட்சம் வங்கிக் கணக்குகளும் இணைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவையில் இது குறித்த கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் சிவப் பிரதாப் சுக்லா எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் மார்ச் ஐந்தாம் தேதி நிலவரப்படி 16கோடியே 65லட்சம் பான் எண்களும், மார்ச் இரண்டாம் தேதி நிலவரப்படி 87கோடியே 79லட்சம் வங்கிக் கணக்குகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாடு முழுவதும் ஆறாயிரத்து 811 வங்கிக் கிளைகளில் ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment