திருமணமாகி சில மணிநேரங்களில் கணவனை இழந்த பெண்- இருப்பினும் லட்சியத்துக்காக பெண் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

  • மதுவுக்காக திருமணமாகிய சில மணிநேரங்களில் மணமகனை கொலை செய்த இளம் வாலிபர்கள். 
  • வரவேற்பு நிகழ்ச்சியுடன் தனது திருமதி படத்தை இழந்து விதவையாகிய மணப்பெண். 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஜோ என்பவருக்கும், எஸ்தர் என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரது திருமணம் நன்கு கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

அதன் பின்பு இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்பொழுது அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலர் தங்களுக்கு மதுவை இலவசமாக அதிகம் தரவேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். அதற்கு மணமகன் மறுப்பும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் ஜோவை மணப்பெண்ணின் சகோதரி வீட்டின் பின்புறம் கொலை செய்து போட்டுள்ளனர். காரணம் கேட்டதற்கு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது, மது தராதது தான் காரணம் என கூறியுள்ளன.

திருமணமாகிய சில மணிநேரங்களில் பெண் விதவையாகிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அந்த பெண் அந்த கவலையுடன் சென்று செவிலியர் தேர்வை எழுதியுள்ளாராம். ஏனென்றால் அது அவரது கனவாம், அதனால் அவ்வளவு கவலையிலும் தான் இதை செய்ததாக கூறியுள்ளார்.

author avatar
Rebekal