10-ம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்ற நடைபாதையில் வசிக்கும் மாணவி! அவரது வெற்றிக்கு கிடைத்த பரிசு!

10-ம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்ற நடைபாதையில் வசிக்கும் மாணவி வீட்டை பரிசாக அளித்த இந்தூர் அரசாங்கம்.

பாரதி கண்டேகர் என்ற மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அவரது குடும்பத்தினருடன் நடை பாதையில் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு தேர்வில் 68 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது கடின முயற்சியையும், வெற்றியையும் பாராட்டி, இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷனால் இவருக்கு ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவி பாரதி கூறுகையில், ‘வீட்டிற்கான நிர்வாகத்திற்கும், தனது எதிர்கால கல்வியை இலவசமாக்கியமைக்கும் நன்றி. என்னை ஊக்குவித்த என் பெற்றோருக்கு நான் நன்றி கூறுகிறேன். எங்களிடம் வசிக்க ஒரு வீடு இல்லை, நாங்கள் நடைபாதையில் தங்கியிருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது எதிர்கால கனவு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாவது  என்றும், அவர் பெற்ற வெற்றியின் பெருமையை தனது பெற்றோருக்கு வழங்குவதாகவும், மேலும் தனது ஆசிரியர்களுக்கும் வழிகாட்டிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.