எதிர்க்கட்சிகள் தொடர் அமளி ! மாநிலங்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல்  நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாநிலங்களவை தொடங்கியது.இதில் .ஜம்மு -காஷ்மீர், ஜே.என்.யூ விவகாரங்கள் குறித்து விவாதிக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்தார்.இதனையடுத்து மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.பின்னர் அமளி காரணமாக மாநிலங்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.