போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் வசூலிக்க புதிய செயலி

போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் வசூலிக்க நவீன இ-சலான் வசதியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக 352 போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு  இ- சலான் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை நேரடியாக கார்டுகளை பயன்படுத்தி ஸ்வைப் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த இயந்திரத்தில் வாகனம் மற்றும் ஓட்டுனர்களின் முழு விவரங்கள் அடங்கி இருக்கும்.
இதன் பின்னர் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசுகையில், சாலை விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற புதிய தொழில்நுட்பம் உதவும் என்று தெரிவித்துள்ளார்.