கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள்- ஸ்டாலின்

கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுக சார்பில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்த நாள் விழாவை  திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்பொழுது அவர் பேசுகையில், திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாம் ஒன்றாகி உள்ளோம்.

தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது.ரயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள் .தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும் மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது.

திமுகவுக்கு பக்கபலமாக இருக்கிறார் வைகோ, வைகோவிற்கு திமுக சார்பாக நன்றி . 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் சரித்திர சாதனையை பெற்றுள்ளோம்.சர்வாதிகாரம் தலை தூக்கி வரும் நிலையில் ஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது என்றும் பேசினார்.