உங்களுக்கான இன்றைய நாள் எப்படி… இதோ இன்றைய (20.10.2020)ராசி பலன்கள்..

மேஷம்: குழப்பம் அதிகரிக்கும் நாள்.சிந்தித்து செயல்படுவீர்கள் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றி மறையும்.

ரிஷபம்: உத்தியோக முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். வெளிநாட்டுத் தகவல்கள் அனுகூலம் தரும். , கொடுக்கல்கள் வாங்கல் ஒழுங்காகும்.

மிதுனம்: இல்லத்தில் அமைதி கூடும்.சான்றோர்களின் அன்பும், நட்பும் கிடைக்கும். எதிரிகள்  உங்களை விட்டு விலகுவர்.முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்

கடகம்: சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.முன்னேற்றம் காண்பிர்கள் நண்பர்கள் வழி உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சிக் கண்டு பெருமை அடைவீர்கள்.

சிம்மம்: இன்று யோகமான நாள். பெற்றோர் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

கன்னி: காரியங்கள் கைகூடுகின்ற நாள். தாய் வழியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உடன்பிறப்புகள் உள்ளம் அறிந்து நடப்பர். உத்தியோக மாற்றம் நன்மை தரும்.

துலாம்: வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டுகின்ற நாள்.  உடனிருப்பவர்களினால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். இல்லத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்புக்கூடும்.

விருச்சகம்:நல்லவர்களைச் சிந்திக்கின்ற நல்ல நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டி சாதிப்பீர்கள். திடீர் பயணத்தால் அதிக லாபம் கிடைக்கும். திருப்பணிக்குதொகைனய அளித்து மகிழ்வீர்கள்.

தனுசு:சுபச் செலவுகள் உண்டு.சுற்றத்தாரை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோக மாற்றம் சிந்தனை மேலொங்கும்.மனகசப்புகள் அகலும்.

மகரம்:இன்று லாபகரமான நாள். பலருடைய அன்பை பெறுவீர்கள் . திடீர் பயணங்கள் ஏற்படும். பண வரவு திருப்தி தரும். இகட்டான சூழலில் உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

கும்பம்: திட்டமிடாத காரியம் கூட இன்று வெற்றி கிடைக்கும். நல்ல மனிதர்கள் ஒத்துனழப்பு  உண்டு. தொழிலில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

மீனம்: சிக்கல்கள் விலகும்.சிறப்புகள் கூடுகின்ற நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். மாலை நேரத்தில் மங்கலகரமான தகவல் வந்து சேரும்.

author avatar
kavitha