புரட்டாசி மாதத்திலும் முட்டை விலை 5 ரூபாய்க்கு மேல் விற்பனை.!

நாமக்கல்லில் முட்டையின் விலை 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பொதுவாக புரட்டாசி மாதத்தில் முட்டையின் தேவை குறைவாக இருக்கும் காரணத்தினால் மக்களிடையே முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது.

அந்த வகையில், கடந்த வாரம் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்த்த முடிவெடுத்தன. அதன்படி, விலை 5.25 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது சென்னையில் இன்றய முட்டையின் விலை ரூ.5.10 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உற்பத்தியாளரான நாமக்கல் மாவட்டத்தில் 5 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.