நேற்று பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவல் ஆய்வாளர் படுகாயம்.!

  • சென்னையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணி செய்யும் ஜெயசித்ரா பாதுகாப்புக்கு பணிக்காக  சென்று உள்ளார்.
  • நேற்று பணிமுடிந்து வீட்டுக்கு இருசக்கர வந்த போது ஜெயசித்ரா பின்னால் வந்த ஆட்டோ அவர் இருசக்கர வாகனத்தில் மோதியது. 

2019-ம் ஆண்டு முடிந்து 2020-ம் ஆண்டு பிறந்துள்ளதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது.புத்தாண்டு பிறப்பு சென்னையில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும்.

அந்த வகையில் இந்த புத்தாண்டை கொண்டாடும் விதமாக கேளிக்கை நிகழ்ச்சிகளில் , போன்றவை நடைபெற்றதால் எந்தவித அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க 1,000-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று எழும்பூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணி செய்யும் ஜெயசித்ரா பாதுகாப்புக்கு பணிக்காக  சென்று உள்ளார். நேற்று பணிமுடிந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஜெயசித்ரா பின்னால் வந்த ஆட்டோ அவர் இருசக்கர வாகனத்தில் மோதியது.

இதில் நிலைகுலைந்து விழுந்த ஜெயசித்ரா படுகாயமடைத்துடன்  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் போலீசார் ஆட்டோவைக் கைபற்றி, ஆட்டோவை டிரைவர் மணிகண்டனிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan