திருமணமாகிய சில நாட்களாக கைகோர்த்து நடந்த தம்பதி!சில நிமிடங்களில் போன கணவரின் நிம்மதி!

  • திருமணமாகிய சில நாட்கள் சந்தோசமாக கைகோர்த்து நடந்த தம்பதி.பின்னர் நடந்த விபரீதம்.
  • சில நிமிடங்களில் கணவரின் கண் முன்னே நடந்த சம்பவம்.நிம்மதியை இழந்து தவிக்கும் கணவர்.

கெலிபோர்னியாவில் உள்ள கார்ல்ஸ்பேட் நகரத்தை சேர்ந்தவர் ஜான் பிங்காம் ஆவார். இவருக்கும் ரோபின் என்ற இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு இருவரும் கைகோர்த்த நிலையில் சாலையில் நடந்து சென்றுள்ளனர்.அப்போது சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் நிலை தடுமாறி இருவரும் பள்ளத்திற்குள் விழுந்துள்ளனர்.

இதில் ரோபின் தலை தரையில் வேகமாக அடித்ததில் அவர் மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.ஜானிற்கு சிறு சிறு காயங்களே ஏற்பட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரோபினை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு ரோபினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.இதனால் மனமுடைந்த ஜான் கதறி அழுத நிலையில் மனைவியின் இழப்பை தம்மால் தாங்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

என் மனைவியின் மரணத்திற்கு காரணம் மோசமான சாலை தான் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது தாம் வழக்கு தொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.