குழந்தைகள் விற்பனை வழக்கு : அமுதா உள்பட 7பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர் .நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 7 பேரின் ஜாமீன் மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment