தனது அண்ணனின் 17-வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தம்பி!

கோவாவில் துணிக்கடை நடத்தி வருபவர் அப்துல் ரசாக்.இவர் தனது மனைவியுடனும் 17-வ்யது சிறுமியுடனும் வசித்து வந்துள்ளார்.கடையின் வியாபாரத்தை பார்த்து கொள்ள தனது தம்பி ரஃபீக்கை வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் ரஃபீக் ,தனது அண்ணனின் 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுமியை வற்புறுத்தி தனது ஆசைக்கு இனங்க பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் இங்கு நடந்தது யாருக்கும் தெரியக்கூடாது என மிரட்டியுள்ளார்.இந்நிலையில் பெற்றோருக்கு சிறுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியை விசாரித்துள்ளனர்.அப்போது ரஃபீக் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

உடனே சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரின் அடிப்படையில் ரஃபீக் ,காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தனது அண்ணனின் மக்களையே மிரட்டி பலாத்காரம் செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.