போலீசாரை கடித்து விட்டு தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரி.!

  • பட்டுக்கோட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • திருவோணத்தில் போலீசாரை கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியும், பல்லால் கடித்து தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த புதுவிடுதியைச் சேர்ந்த இளங்கோவன், அருண்பாண்டியன் இருவரும் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு தகவல் தெரிந்தது. பின்னர் அவர்கள் திருவோணத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்றபோது அவர்கள் கட்டை மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கி பல்லால் கண்டித்துள்ளனர். இதனால் மதுவிலக்கு அமலாக்கத்துறை தலைமைக் காவலர் செந்தில்குமார், ஆயுதப்படைக் காவலர் ஆல்வின் ஆகியோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தப்பியோடி தலைமறைவாக உள்ள இளங்கோவன், அருண்பாண்டியன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்