9 வயது சிறுமியின் மீது அத்துமீறய 66 வயது முதியவர் கைது.!

சாக்லேட் வாங்கி தருவதாக 9 வயது சிறுமி மீது அத்துமீறய 66 வயது முதியவர் கைது.

மதுரையில் ரங்கசாமி என்ற முதியவர் வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற ரங்கசாமி சாக்லேட் வாங்கி தருவதாக அந்த மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்குள் குழந்தையை அழைத்துச் சென்ற ரங்கசாமி குழந்தையிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த சிறுமி அலறி அடித்து தன் வீட்டுக்கு வந்த குழந்தை தாயிடம் இந்த விஷயங்களை அழுதுகொண்டே சொன்னதும் குழந்தையின் பெற்றோர் மதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பெயரில் முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.