திருநங்கை என்று கேலி செய்ததால் 16 வயது மாணவன் தூக்குபோட்டு தற்கொலை.!

திருநங்கை என்று கேலி செய்ததால் 16 வயது மாணவன் தூக்குபோட்டு தற்கொலை.!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பரேலியில் உள்ள சுபாஷ் நகரில் 16 வயது மாணவர் சிலர் அவரை திருநங்கை என்று கூறியதால் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.  இவர் பரேலியில் 10ம் வகுப்பு படித்து வந்தார், இந்த நிலையில் இவர் தற்கொலை செய்வதற்கு முன்தினம், தனது தம்பியுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். 

இந்நிலையில் 16 வயது மாணவன் தனது வீட்டில் படித்து கொண்டிருக்கும் போது அவரது தந்தை சந்தைக்கு சென்றவுடன் தனது வீட்டின் மற்றோரு அறையில் சென்று திருநங்கை என்று கூறியது தங்கமுடியாமல் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

அந்த 16 வயது மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார், அந்த கடிதத்தில், நான் எனது அப்பாவிற்கு நல்ல மகனாக இல்லை “எனக்கு பெண் போன்ற அம்சங்கள் உள்ளன, என் முகம் கூட  பெண்களை  போன்றது. மக்கள் என்னைப் பார்த்து அதனால்தான் சிரிக்கிறார்கள்.என்று மிகவும் மனஉளைச்சலுடன் கூறியுள்ளார். 

மேலும் மீண்டும் நான் பிறந்தால் ஒரு பெண்ணாக பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிகொள்ளுங்கள் , மேலும் எனது குடும்பத்தில் அடுத்ததாக ஒரு பெண் பிறந்தால் நான் திரும்பிவிட்டேன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றும் எழுதியுள்ளார். மேலும் அடுத்ததாக அவரது தந்தை கூறியது எனது மகன் மிகவும்  சாதாரணமானவர், ஆனால் எனது உறவினர்கள் உட்பட ஒரு சிலர் எனது மகனை தவறாகப் புரிந்துகொண்டு, அவரிடம் மோசமான கருத்துக்களைக் கூறி அவரை கேலி செய்வார்கள்.” என்றும் கூறியுள்ளார். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube