தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா..பாதிப்பு 834 ஆக உயர்வு – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 738 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 834 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக தான் உள்ளது என்றும் 27 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளார்கள்  என்று கூறியுள்ளார்.

இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 59,918 பேரும், அரசு கண்காணிப்பில் (கொரோனா வார்டு) 211 பேர் இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 7,267 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 834 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 32, 796 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதில் 1480 பேர் டெல்லி சென்று வந்தவர்களில் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களில் 763 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்