MIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.!

இரண்டு சிறப்பான கேட்சை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் போட்டியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை. இப்போட்டி அபுதாபி உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்து வரும் மும்பையில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் டி கோக் களமிறங்கினர். பின்னர் ரோஹித் 10 பந்துகளுக்கு 12 ரன்கள் அடித்து, சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து டி கோக் 20 பந்துககளுக்கு 33 ரன்கள் எடுத்து, சாம் குர்ரான் ஓவரில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்க, மனோஜ் திவார 42 ரன்களை விளாசினார். ஜடேஜா ஓவரில் மனோஜ் திவாரியின் கேட்சை டூ பிளெசிஸ் சிக்ஸ் லைனில் பறந்து ஒரு சிறப்பாக பிடித்தார்.

இதை தொடர்ந்து திரும்பவும் ஜடேஜா ஓவரில் ஹர்டிக் பாண்டியாவின் கேட்சை டூ பிளெசிஸ் சிக்ஸ் லைனில் பறந்து மற்றோரு சிறப்பான கேட்சை பிடித்துள்ளார். தற்போது டூ பிளெசிஸ் மட்டும் மூன்று கேட்சிகளை பிடித்துள்ளார். இறுதியாக மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. 163 ரன்கள் அடித்தல் வெற்றி என சென்னை அணி களமிறங்கவுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்