பருத்தி ஜிப்பாவை தைத்து அனுப்பிய 90 வயது முதியவர்.! யாருக்குன்னு தெரியுமா.?

பருத்தி ஜிப்பாவை தைத்து அனுப்பிய 90 வயது முதியவர்.! யாருக்குன்னு தெரியுமா.?

Default Image
  • பொள்ளாச்சியை சேர்ந்த 90 வயது முதியவர் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வரவேற்கும் விதமாக பருத்தி துணியாலான ஜிப்பாவை தைத்து அனுப்பி வைத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். இவர் வருகையை முன்னிட்டு பல்வேறுகலை நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு போன்ற  நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு பொள்ளாச்சியை சேர்ந்த தையல் கலைஞர் 90 வயதுடைய முதியவர் விஸ்வநாதன் என்பவர் பருத்தி நூலில் ஜிப்பா உடையை தைத்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த இவர், பொள்ளாச்சி பகுதிக்கு வருகை தந்த முதல்வர் காமராஜர், திரைப்பட நடிகர் சிவாஜி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பருத்தி துணிகளால் ஆன ஆடைகளை அவரே தைத்து பரிசாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கும் இவர் பருத்தி ஆடைகளை தைத்து அனுப்பியுள்ளார். இந்நிலையில், வரும் 24-ம் தேதி இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வரவேற்கும் விதமாக பருத்தி துணியாலான ஜிப்பாவை தைத்து, அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் என தகவல் வந்துள்ளது.

Join our channel google news Youtube