விக்கிரவாண்டி தொகுதியில் 9 பறக்கும் படையும், 9 நிலையான படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது-விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

விக்கிரவாண்டி தொகுதியில் 9 பறக்கும் படையும், 9 நிலையான படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  இடைத்தேர்தலை அறிவித்தார்.

இதனிடையே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், விக்கிரவாண்டி தொகுதியில் 9 பறக்கும் படையும், 9 நிலையான படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது . நாடாளுமன்ற தேர்தலின் போது 18 தொகுதிகள் பதற்றமானவையாக இருந்தன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விபி-பாட் இயந்திரங்கள் தயாராக உள்ளன, இடைத்தேர்தலுக்கான பணியாளர்கள் பட்டியலும் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.