ரூ.77000 கள்ள நோட்டு ! குமரியில் கள்ள நோட்டு கும்பல் கைது 

கன்னியாகுமரியில்  கள்ள நோட்டு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

கேரளாவிற்கு போதை பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு புகார் ஓன்று வந்தது.இதனை தொடர்ந்து  கன்னியாகுமரியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை கண்காணித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து சபத் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த நபர் தங்கியிருந்த அறையில் நடத்திய சோதனையில் ரூ.200,500 அச்சடிக்கும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.77000 மதிப்புள்ள கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்தது போலீசார். தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.மேலும்  இந்த கும்பல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.